உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

'4 ஆண்டுகளில் 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன'ஆத்துா:ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துலுக்கனுார் ஊராட்சிகளில் பல்வேறு திட்டப்பணிகள், குடிநீர் வினியோகம் குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: ஆத்துார் ஒன்றிய பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த ஒன்றியத்தில், 4 ஆண்டுகளில், 153.22 கோடி ரூபாய் மதிப்பில், 4,814 திட்டப்பணிகளில், 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் நடக்கின்றன. தவிர, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை