உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு

4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு

சேலம், பீகார் மாநிலம் பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில் நேற்று காலை, 7:45 மணிக்கு, பொம்மிடி - சேலம் ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்ததில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !