உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு

4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு

சேலம்: சேலம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி, மக்களிடம் முதலீடு பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அறக்கட்டளை தலைவர் விஜ-யபானு உள்பட, 4 பேரை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர். கடந்த, 5ல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 4 பேரையும், 3 நாள் காவலில் எடுத்து, சேலம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மோசடி பணத்தில் வாங்கிய நில ஆவ-ணங்கள், அறக்கட்டளை நடத்திய இடத்தில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அம்மாபேட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தவிர, அந்த நிறுவ-னத்தின், 25 ஏஜன்டுகள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் காவலில் எடுத்த, 4 பேரையும், கோவை டான்பிட் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மீண்டும் சிறையில் அடைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை