உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை சீண்டியவருக்கு 5 ஆண்டு

சிறுமியை சீண்டியவருக்கு 5 ஆண்டு

சேலம், சங்ககிரி, வன்னியர் காலனியை சேர்ந்தவர் பூங்காவனம், 55. கூலித்தொழிலாளியான இவர், 2023 ஏப்., 26ல், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, பூங்காவனத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.அதில் பூங்காவனத்துக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !