உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

ஆத்துார்: சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 53. மாற்றுத்திறனாளியான இவர், கடந்த, 16ல், 'ஜூபிடர்' மூன்று சக்கர மொபட்டில் ஆத்துாரில் இருந்து, சேலம் நோக்கிச்சென்று-கொண்டிருந்தார். புது உடையம்பட்டி சென்றபோது மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ