மேலும் செய்திகள்
தலைமறைவாக இருந்த 2 பேர் சுற்றிவளைப்பு
10-Aug-2025
சேலம், வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர், நேற்று கைது செய்யப்பட்டார்.சேலம், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், கடந்த 2024ல், வழிப்பறி வழக்குகளில், தாதகாப்பட்டி, மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பிரசாந்த், 25, கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரசாந்தை, நேற்று அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
10-Aug-2025