பி.எல்.ஓ., ஊழியர் மீது அ.தி.மு.க., பகிரங்க புகார்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி ஆணையர் நிவேதிதாவிடம், நேற்று நகர, அ.தி.மு.க., செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்ப-தாவது: ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள், 48 பூத்துகள் உள்-ளன. நேற்று முன்தினம், 108வது பூத்துக்கு விண்ணப்பம் அளிக்க வந்த, பி.எல்.ஓ., ஊழியர், 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்-களை, தி.மு.க., பி.எல்.ஏ.,-2 இடம் மொத்தமாக வழங்கி-யுள்ளார்.இதுகுறித்து, பி.எல்.ஓ.,விடம் விசாரித்தபோது, 'மேலிடம் உத்த-ரவு, அதனால் தான் தருகிறேன்' என்றார். யார் கூறியது எனக்-கேட்டதற்கு, பதில் கூறவில்லை. இதற்கான ஆதாரங்கள், ஆடியோ ஆகியவை எங்களிடம் உள்ளன. அதேபோல், ராசி-புரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றுக்கொண்டு, தி.மு.க.,-பி.எல்.ஏ.,-2, அவ்வழியாக டூவீலரில் செல்பவர்களை நிறுத்தி விண்ணப்பங்களை வழங்கி வருகிறார். இதற்கான ஆதா-ரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ., ஊழியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.