உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஜலகண்டாபுரம்: கால்வாய் தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.வனவாசி, சப்பாணிப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் தங்கராஜ், 34. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், தனது மாமியார் ஊரான ஜலகண்டாபுரம் அருகே, காட்டம்பட்டிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். மாலை, 5:00 மணியளவில் மகன் அதர்வாவை, 10. காணவில்லை என தங்கராஜ் தேடி-யுள்ளார். சந்தேகத்தின் பேரில், அருகில் இந்திரா நகர் ஓடையில் சென்று பார்த்த போது, அதர்வா தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி