மேலும் செய்திகள்
விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பலி
10-Jul-2025
ஆத்துார்: ஆத்துார், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் கேசவன், 38. அரசு பஸ்சில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்தார். நேற்று ஆத்துாரில் இருந்து வளையமாதேவிக்கு, 'ஹீரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். மதியம், 2:20 மணிக்கு, வளையமாதேவி பிரிவு சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே, மின் கம்பம் மீது பைக் மோதியது. இதில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற கேசவன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Jul-2025