உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் கேஷியர் பலி

விபத்தில் கேஷியர் பலி

தாரமங்கலம்: தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையை சேர்ந்தவர் ரம்யா, 30. இவரது கணவர் சக்தி வேல், 37, பேக்கரியில் கேஷியராக பணிபு-ரிந்து வந்தார். இவர், தருமபுரியில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வர நேற்று சென்றார். அப்போது மதியம், 2:15 மணிக்கு, காடம்பட்டி பஸ் அருகே சென்றபோது, ஓமலுாரில் இருந்து வந்த சுமோ வாகனம் மோதியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அவரை அங்கிருந்த மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்னவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக ரம்யா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ