வாலிபரை தாக்கிய குடிமகன் கைது
சேலம், சேலம், அஸ்தம்பட்டி, கல்லாங்குத்துார் புதுாரில் உள்ள சுகாதார வளாகத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த கண்ணன், 39, நேற்று சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கதிரவன், 31, 'போதை'யில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கேட்டபோது, கதிரவன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அந்த கண்ணன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், கதிரவனை கைது செய்தனர்.