உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சண்டை சேவல் விற்பனை சேலத்தில் விறுவிறு

சண்டை சேவல் விற்பனை சேலத்தில் விறுவிறு

இடைப்பாடி:காணும் பொங்கலன்று, தமிழகம், தென் மாநிலங்களின் சில பகுதிகளில் சேவல் சண்டை நடத்தப்படும். பல இடங்களில் போலீஸ் அனுமதி இல்லாமலும், சில இடங்களில் போலீசின் மறைமுக ஆதரவோடும், தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் சேவல் சூதாட்டம் நடக்கிறது.சேலம் மாவட்டத்தில் மயில், கீரி, பேய்க்கருப்பு, கொக்கு வெள்ளை, காகபேடு, செங்கருப்பு, வெள்ளை, சுள்ளி உள்ளிட்ட ரகங்களில் சண்டை சேவல்கள் உள்ளன. மற்ற இடங்களில் வளர்க்கப்படும் சேவல்களைவிட, சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுபவை அதிதீவிரமாக சண்டையிடும் வழக்கம் கொண்டது.அதனால், சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய சந்தைக்கு, 500க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. கடப்பா, மைசூரு, பெங்களூரு, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்தனர். சண்டை சேவல், 2,000 முதல், 15,000 ரூபாய் வரை, சண்டையிடும் தரத்துக்கு ஏற்ப விற்பனையானது. இதன் வாயிலாக, 10 லட்சம் ரூபாய் சண்டை சேவல்கள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை