மேலும் செய்திகள்
கூடலுாரில் மழை வேண்டி பூக்குழி இறங்கிய பக்தர்கள்
24-Apr-2025
ஆத்துார், ஆத்துார், மஞ்சினி புத்துமாரியம்மன் கோவிலில், கடந்த, 6ல் சித்திரை திருவிழா, அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. மதியம், காவடி ஆட்டம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியபடியும், கரகம் எடுத்து வந்தும், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி மூலவர் புத்துமாரியம்மன், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
24-Apr-2025