நகராட்சியாக சங்ககிரி தரம் உயர்வு தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
சங்ககிரி: சங்ககிரி சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்தை, நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் சங்ககிரி டவுன் பஞ்சாயத்து தலைவி மணிமொழி தலைமையில் கவுன்சிலர்கள், தி.மு.க.,வினர், அங்குள்ள பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே, நேற்று பட்டாசுகளை வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலர் சுந்தரம், பேரூர் செயலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.