உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மினி ஆட்டோ மோதி முதியவர் உயிரிழப்பு

மினி ஆட்டோ மோதி முதியவர் உயிரிழப்பு

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு அருகே, வட்டூர் பெத்தாம்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வீரப்பன், 74; கூலிதொழிலாளி. இவர் கடந்த, 20ல் திருச்செங்கோடு சாலையில் நடந்து சென்று கொண்-டிருந்தார். அப்போது, சேலம் நோக்கி அதிவேகமாக வந்த மினி-ஆட்டோ, அவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட வீரப்பன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். வீரப்பனின் பேரன் சந்தோஷ்குமார் அளித்த புகார்-படி, மினிஆட்டோ டிரைவர், சேலத்தை சேர்ந்த ராபின் என்ப-வரை மல்லசமுத்திரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை