உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்புசேலம் : நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகர், 62. 'மல்டிலெவல் மார்க்கெட்டிங்' தொழில் செய்தார். சில நாட்களுக்கு முன், சேலம் வந்த அவர், பள்ளப்பட்டி பி.எம்.ஆர்., நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். 4 நாட்களாக, அவரது அறை திறக்கப்படாத நிலையில், நேற்று துர்நாற்றம் வீசியது. விடுதி நிர்வாகம் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் மனோகர் இறந்து கிடந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றி, அவரது உறவினர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !