உள்ளூர் செய்திகள்

தொழிலாளி சாவு

சங்ககிரி: சங்ககிரி அருகே வேலம்மாவலசு பகுதியை சேர்ந்த கூலித்தொழி-லாளி முத்துசாமி மகன் கிருஷ்ணன், 32. இவர் வழக்கம் போல், பெருந்துறையில் உள்ள தனியார் நுாற்பாலைக்கு வேலைக்கு செல்ல தன்னுடைய ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் பைக்கில், சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பெட்ரோல், டீசல் விற்பனையகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிரி-ழந்த கிருஷ்ணனுக்கு காமாட்சி என்ற மனைவி, சஸ்விகாஸ்ரீ என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை