குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது
இடைப்பாடி: இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பை, குறுக்குப்பாறையூரில் கொட்டப்படுகிறது. இதற்கு அப்ப-குதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, இரு மாதங்களாக போரா-டுகின்றனர். நேற்றும் அப்பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கம்யூ., கட்சியின் சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்-திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த, 31 பேரையும், தேவூர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்-தனர். இந்நிகழ்வு, 34ம் முறையாக நடந்தது.