உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை

மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி ஒண்டியூரில் உள்ள ராஜன் குட்டைக்கு, சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் இருந்து ஓடை வழியே மழைநீர் வந்தடையும். நெடுஞ்-சாலை அடியில், ஓடைக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் இருந்த மழைநீர் ஓடையை மூடி, பாதை, விவசாய நிலமாக மாற்றிவிட்டனர். ஆக்-கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து ஓடையை மீட்க வேண்டும். அதேநேரம், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜன்குட்டையை அளவீடு செய்து, பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க, சமீபத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை