உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கயிறு ஆலையில் தீ விபத்து

கயிறு ஆலையில் தீ விபத்து

தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூர், அன்பு நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன், 40. அதே பகுதியில், கயிறு தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று மதியம், 3:00 மணிக்கு, தேங்காய் நார் கழிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 3:40 மணிக்கு அங்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். யாரேனும் தீ வைத்தனரா என, தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி