உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்

ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்

ஆத்துார், சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி, டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனும், திரவ இயற்கை எரிவாயு வாயிலாக, பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, 7 கோட்ட போக்குவரத்துக்கழகங்களில், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மாற்றப்பட்டன. அதில், ஆத்துார் - மதுரை இடையே, முதல்முறை நேற்று இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது, ஆத்துார் - மதுரை தடத்தில், சி.என்.ஜி., பஸ் இயக்கப்பட்டது. ஆத்துாரில் காலை, 8:27க்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே மதுரைக்கு, மாலை, 4:30 மணிக்கு செல்கிறது. இதனால் எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி பராமரிப்பு, இயக்க செலவு குறைகிறது' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ