சிறுத்தையை கொன்ற வழக்கு முன்னாள் தலைவருக்கு ஜாமின்
மேட்டூர்: கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே கடந்த, 27ல், சிறுத்தை செத்து கிடந்தது. இதுதொடர்பாக கடந்த, 30ல் தின்னப்பட்டி ஊராட்சி தலைவர் முனுசாமி, 50, உள்பட, 3 பேரை, மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர். அதில் இருவருக்கு, கடந்த, 21ல் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முனுசாமிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.