மோசமான சாலையால் அடிக்கடி விபத்து
மகுடஞ்சாவடி, நவ. 2-அ.புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, இச்சைகாயன் குட்டை முதல், காட்டூர் ஐயனாரப்பன் கோவில் வரை உள்ள ஒரு கி.மீ., துார சாலையை, சரியாக பராமரிக்காத காரணத்தால் கடந்த, 10 ஆண்டுகளாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அவசர காலத்தில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரடு, முரடான சாலையை புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.