மேலும் செய்திகள்
'கோல்மால்' ஆசிரியர் 'சஸ்பெண்ட்
07-Nov-2024
தலைவாசல்: அரசு பள்ளி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' உத்தரவை திரும்ப பெறக்-கோரி, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மக்கள் சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, கிழக்குராஜாபாளை-யத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயபி-ரகாஷ். அவரது கால்களை அங்கு படிக்கும் மாணவர்கள் பிடித்து-விட்டனர்.இதுகுறித்த வீடியோ பரவியது. இதையடுத்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.நேற்று காலை, 7:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கிழக்குராஜாபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்-போது, 'ஜெயபிரகாஷ் மீது தவறு இல்லை. அவரது, 'சஸ்பெண்ட்' உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.வீரகனுார் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்திய பின், 8:00 மணிக்கு மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர். பின் மாணவர்களது பெற்றோர், மக்கள், காலை, 8:20 மணிக்கு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவ, மாணவி-யரும் பங்கேற்றனர்.அப்போது போலீசார், 'வரும் 25ல், மாவட்ட கல்வித்துறை அதி-காரிகள், பள்ளிக்கு வந்து விசாரித்து தீர்வு காண்பதாக தெரிவித்-துள்ளனர்' என, உறுதி அளித்தனர்.இதனால், 9:20க்கு, மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால், சேலம் - பெரம்பலுார் மாவட்ட எல்லை சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
07-Nov-2024