உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிப்பர் லாரியுடன்கிராவல் மண் பறிமுதல்

டிப்பர் லாரியுடன்கிராவல் மண் பறிமுதல்

கெங்கவல்லிகெங்கவல்லி அருகே கடம்பூரில் நேற்று, கனிமவளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி 'சைகை' காட்டினர். அதன் டிரைவர், சற்று முன்னதாகவே லாரியை நிறுத்திவிட்டு, அவர் உள்பட, 2 பேர் இறங்கி ஓடிவிட்டனர். லாரியை, புவியியல் உதவி அலுவலர் அரவிந்த்பிரசாத் தலைமையில் அலுவலர்கள் கைப்பற்றி, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !