மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
14-Feb-2025
சேலம்: சேலம் மாவட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பில், சேலம் நாட்டாண்மை கழக கட்டட பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார்.அதில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் - 2 பணியிடங்களை, தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு, முன்னுரிமை அளித்து நிரப்புதல்; 5,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை - 2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில துணைத்தலைவர் தங்கராஜூ, மாவட்ட செயலர் சீனிவாசன், சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க செயலர் கிரிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Feb-2025