உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் திருட்டு

சேலம்: சேலம், ரெட்டியூர் சரவணா கார்டன், 2வது தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 31. இவர் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 29ல், வீட்டை பூட்டி விட்டு சண்முகசுந்தரம் சொந்த ஊரான வாழப்பாடிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, ஒன்பதே முக்கால் பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை