மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்குஅடையாள அட்டை வழங்கல்நங்கவள்ளி, நவ. 16--நங்கவள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. வட்டார வள மேற்பார்வையாளர் காளியப்பன் தலைமை வகித்தார். அதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, பள்ளி மாணவ, மாணவியர், 160 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் சேலம் மாவட்ட மாற்றுதிறனாளி துறை அலுவலர் மகிழ்நன், மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆசிரிய பயிற்றுனர்கள், முடநீக்கு சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.