ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு
ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதையில் நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் உள்ள, 60 அடி பாலம் அருகே உள்ள மலைப்பாதை ஓரத்தில், 15 அடி உயரத்தில் இருந்த சிறிய பாறை ஒன்று சரிந்து விழுந்து, சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. பாறை சரிந்து, அதிலி-ருந்த இரண்டு சிலவஞ்சி மரங்கள் வேருடன் சாலையின் குறுக்கே விழுந்தது.இதனால் நேற்று காலை மலைப்பாதையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வந்த வாகன ஓட்-டிகள் சிலர், சாலையில் விழுந்த சிறிய அளவிலான மரக்கிளை-களை உடைத்து, வாகனங்கள் தற்காலிகமாக சென்று வர வழி செய்தனர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, நெடுஞ்-சாலை துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், சாலையின் குறுக்கே விழுந்த மரங்-களை அப்புறப்படுத்தினர். பிறகு மலைப்பாதையில் போக்குவரத்து முழுவதுமாக சரி செய்யப்பட்டது. பின்னர், சாலையோ-ரத்தில் விழுந்த பாறையை அப்புறப்படுத்தினர். மேலும் பாறை விழுந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், மேலும் ஒரு பாறை ஆபத்தான நிலையில் சரிவது போல் இருப்பதால், மலைப்பா-தையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.