விவசாய கிணற்றில் ஒயர் திருடியவர் கைது
பனமரத்துப்பட்டி, மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்த மின் மோட்டார் ஒயர் அடிக்கடி மாயமாகி வந்தது. இதுகுறித்து விவசாயிகள் புகார்படி, மல்லுார் போலீசார் விசாரித்ததில், ஏர்வாடி மூங்கிலேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 35, திருடி வந்தது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.