உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு

மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு

ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் ஊராட்சி, ஈச்சங்காட்டை சேர்ந்த விவசாயி சேகர், 55. நேற்று பசு மாட்டை பிடித்துக்கொண்டு, தண்ணீர் இல்லாத கிணறு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாடு மிரண்டு ஓட, தடுமாறிய சேகர், கிணற்றில் விழுந்துள்ளார். மக்கள், அவரை மீட்க முயன்றபோது, தலையின் பின் பகுதியில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரிந்தது. மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ