உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணமான பெண் ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் தஞ்சம்

திருமணமான பெண் ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் தஞ்சம்

ஏற்காடு: உறவினரை திருமணம் செய்து கொண்ட பெண், ஒரு வாரத்துக்கு பின் வீட்டில் இருந்து வெளியேறி, அவரது காதலனை திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்.திருப்பத்துார், வக்கனம்பட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 21. பி.சி.ஏ., முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு ஜூன் 8ல், உறவினர் சூர்யாவுடன், இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணமானது. ஆனால் நேற்று பிரியதர்ஷினியும், சேலம் மாவட்டம் ஏற்காடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, தனியார் தங்கும் விடுதியில் பணிபுரியும் சந்தோஷ், 22, என்பவரும், திருமணம் செய்து கொண்டதாக கூறி, குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பிரியதர்ஷினி, சந்தோஷ், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி காதலித்துள்ளனர். பிரியதர்ஷினி குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி, அவருக்கு சூர்யாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அத்திருமணம் பிடிக்காததால், காதலனுடன், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். விசாரணைக்கு, பெண்ணின் பெற்றோரை அழைத்ததற்கு வரவில்லை. சி.எஸ்.ஆர்., பதிவு செய்து அனுப்பிவைத்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
ஜூன் 16, 2025 11:58

நல்ல வேலை மாப்பிள்ளை தப்பித்து விட்டார். இல்லாவிட்டால் போட்டு தள்ளி விடுகிறார்கள் இன்றைய சில பெண்கள். கொலை உம் செய்வாள் பத்தினி. இதை முதலில் செய்து இருக்கலாம். அது சரி முதல் திருமணம் divorce ஆகாமல் இரண்டாவது திருமணம் சட்டப்படி தவறு. காவல்துறை அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஒரு சார்பாக செயல் படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை