உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாயமான சிறுவர்கள் சென்னையில் மீட்பு

மாயமான சிறுவர்கள் சென்னையில் மீட்பு

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டியை சேர்ந்த, 14 வயது சிறுவன், பக்கத்து ஊரில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். அவரது வீடு அருகே வசிக்கும், 16 வயது சிறுவன், கட்டட வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். கடந்த, 26ல் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்ததில், சென்னையில் இருவரும் இருந்தது தெரிந்தது. அவர்களை, பனமரத்துப்பட்டி போலீசார் மீட்டு வந்து, நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பெற்றோர்கள் திட்டியதால், வெளியூர் சென்றதாக, சிறுவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை