பாராலிம்பிக் வீரருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
ஓமலுார்: பாரிஸில் நடந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற மாரியப்பன் நேற்று முன்தினம், அவரது சொந்த ஊரான, காடையாம்பட்டி, பெரியவடகம்பட்டிக்கு வந்தார். நேற்று அவரை, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலை-மையில் பா.ம.க.,வினர், பெரியவடகம்பட்டி சென்று, மாரியப்ப-னுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.