மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
30-Nov-2025
ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் காசி, 26. பி.காம்., பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், வேலைவாய்ப்பு நேர்-காணலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட, இரவு, 10:00 மணிக்கு, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.பஸ் இல்லாததால், அங்கேயே துாங்கிக்கொண்டிருந்தார். அதி-காலை, 4:00 மணிக்கு எழுந்தபோது, அவரது சட்டை பாக்-கெட்டில் வைத்திருந்த, 27,000 ரூபாய் மதிப்பிலான, ஆன்ட்-ராய்டு போனை காணவில்லை. அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Nov-2025