2 குழந்தைகளுடன் தாய் மாயம்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்சேலம், ஆட்டையாம்பட்டி அருகே மாரி தெருவை சேர்ந்த, பெயின்டர் கோபி, 35. இவரது மனைவி, மாற்றுத்திறனாளி சபீனா, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சபீனா, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையத்தில் உள்ள தறி பட்டறையில் பணிபுரிகிறார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த, 9ல் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து சபீனா வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கோபி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.