உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

சேலம்:சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 38. தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி, 26. இவர்களது மகன்கள் ஸ்ரீதரன், 6, சுதர்சன், 3. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்-தது. கடந்த, 10ல் மீண்டும் தகராறு ஏற்பட்டு, இந்திராணி, இரு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வர-வில்லை. இதுகுறித்து சுரேஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்-படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் காடையாம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த வெற்-றிவேல் மகள் ராகவி, 23. இவர், கணவர் இடையே தகராறு ஏற்-பட்டதால், அவரை பிரிந்து, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கரும்பாலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த, 8ல் வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. வெற்றிவேல் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ