உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு லாரி மோதி மும்பை வாலிபர் பலி

சரக்கு லாரி மோதி மும்பை வாலிபர் பலி

ஏத்தாப்பூர், மும்பையை சேர்ந்தவர் ரமேஷ் மோகன் பட்டேல், 49. இவர், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது நண்பர் வேலுவின் குலதெய்வ சிறப்பு பூஜைக்கு, கடந்த, 26ல் வந்தார். பூஜை முடிந்த நிலையில், 29 இரவு, 11:40 மணிக்கு, வீரகவுண்டனுார் பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக வந்த, சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றிய நிலையில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை