மேலும் செய்திகள்
நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
27-Sep-2024
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை, அதன், 18வது வார்டு மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது சாலை, சாக்கடை துார் எடுத்தல், புது சாக்கடை அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் பலனில்லை என, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டரிடம் முறையிட்டனர். தொடர்ந்து அவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், 18வது வார்டில் ஆய்வு செய்தனர். பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால் மக்கள் சென்றனர்.
27-Sep-2024