உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு:சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையின், 8வது கொண்டை ஊசி வளைவுக்கு, ஈ.வெ.ரா., பெயர் வைக்கப்பட்டுள்-ளது. அதன் மீது, நா.த.க.,வினர், நேற்று காலை கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்-றனர்.இதுகுறித்து, நா.த.க., வினர் கூறுகையில், '8வது வளைவுக்கு, 'தகடூர் அதியமான்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை புதுப்பித்தபோது, ஈ.வெ.ரா., வளைவு என மாற்றி எழுதிவிட்-டனர்' என்றனர்.இதையடுத்து, ஈ.வெ.ரா., வளைவு மீது, தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டிய நா.த.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ஏற்-காடு போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ