மேலும் செய்திகள்
'எண்ணும் எழுத்தும்' ஆசிரியர்களுக்கு பயிற்சி
11-Jun-2025
கெங்கவல்லி, கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்ட, முதல் கட்ட ஒரு நாள் பயிற்சி, அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். சேலம், 'டயட்' விரிவுரையாளர் கலைவாணன், வட்டார மேற்பார்வையாளர் ராணி(பொ), ஆசிரிய பயிற்றுனர்கள் முன்னிலையில், வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சி அளித்தனர். ஒன்றியம் முழுதும் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்கள், 75 பேர் பங்கேற்றனர். மீதி, 75 ஆசிரியர்களுக்கு, இன்று பயிற்சி நடக்கிறது.
11-Jun-2025