உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

சங்ககிரி, தேவூர், கத்தேரியை சேர்ந்தவர் மாதேஸ், 38. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் காலை துாக்கத்தில் இருந்து எழுந்த மாதேஸ், வீட்டிலிருந்து அருகில் உள்ள பகுதிக்கு டீ கடைக்கு சென்றுள்ளார். காலை, 5:30 மணிக்கு கத்தேரி தேசிய நெடுஞ்சாலை பிரிவில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !