மாணவர் பாதுகாப்பு குழு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சேலம்: மாணவ, மாணவியர் மீதான பாலியல் தொல்லைகளை தவிர்க்க, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்க, கடந்த நவம்பரில் உத்தரவிடப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக, போக்சோ வழக்கில் பலரும் கைதாகி வருகின்றனர். இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் விபரம், அதன் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.