2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஊராட்சி ஆணையாம்பட்டி புதுாரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள், சீரான குடிநீர் வினியோகம்; தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு, நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலர்கள் யாரும் இல்லாததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஆணையாம்பட்டி புதுாரை சேர்ந்த மக்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், துணை பி.டி.ஓ., யுவராஜ் பேச்சு நடத்தினார். அப்போது, 'பி.டி.ஓ.,விடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்தனர்.