உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெ.தி.க., பிரமுகர் கொலை; தளி எம்.எல்.ஏ., ஆஜர்

பெ.தி.க., பிரமுகர் கொலை; தளி எம்.எல்.ஏ., ஆஜர்

சேலம்: கிருஷ்ணகிரியில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் பழனி. இவர், 2012 ஜூலை, 5ல் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை ண்டித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உத்தனபள்ளி போலீசார், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் இலகுமையா உள்பட, 25 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 12 ஆண்டுக்கு பின் ஜூன், 8ல் விசாரணைக்கு வந்தது. 3 பேர் இறந்ததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்பட, 19 பேர் ஆஜராகினர். அரசு சாட்சி வாஞ்சிநாதனிடம், எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். நீதிபதி சுமதி, பிப்., 26க்கு வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ