உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பனைமடலை சேர்ந்த, லாரி டிரைவர் முருகன். அவரது மனைவி செல்லம், 35. இவர்களுக்கு, நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில், 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவமாக பிறந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய, செல்லம் அனுமதிக்கப்பட்டார். அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு இறந்தார்.உடல் பரிசோதனை செய்யாமல் தவறான முறையில் அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தது தான், செல்லம் உயிரிழக்க காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடலில், கருமந்துறை - ஏத்தாப்பூர் நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், செல்லம் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் உறுதி அளித்தார்.இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள், 4:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ