உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

சேலம்: சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல உதவி கமிஷன-ராக புவனேஸ்வரன் என்பவர், சில மாதங்களுக்கு முன் பொறுப்-பேற்றார். இவர், அமைச்சரின் மக்கள் குறை கேட்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உயர் அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனால் அவரை பணியில் இருந்து விடுவித்து, சேலம் மாநக-ராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அம்மாபேட்டை உதவி கமிஷனர் வேடியப்பன், கொண்-டலாம்பட்டி உதவி கமிஷனர் பொறுப்பை, கூடுதலாக கவ-னிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !