உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு காப்பு

பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு காப்பு

சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையம், விஜயராகவாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் விஜய், 27. புது ரோடு, சுந்தர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார். கடந்த, 9 இரவு, பெட்ரோல் அடிக்க வந்த இரு வாலிபர்களிடம் தகராறு ஏற்பட்டதில், ஒருவரை, விஜய் கையால் தாக்கினார். பின் அங்கிருந்து சென்ற இருவரும், அரை மணி நேரத்தில் திரும்ப வந்து, விஜயை கத்தியால் சரமாரியாக வெட்டினர். 7 இடங்களில் காயம் ஏற்பட்டு, அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த சந்துரு, 22, திருமலைகிரியை சேர்ந்த நந்தகுமார், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை