மேலும் செய்திகள்
தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு
30-Oct-2025
சேலம், சேலம், வலசையூர், தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, டியூசன் நடத்துகிறார். நேற்று முன்தினம் டியூசன் கட்டடத்தில் விக்னேஷ் துாங்கியுள்ளார். அவரது தாய் சுமதி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை சுமதி வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 25,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து விக்னேஷ் புகார்படி, வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Oct-2025