தமிழக அரசு பொறியியல் கல்லுாரிகளில் முதல்முறையாக சேலம் கல்லுாரிக்கு ஏ பிளஸ் அந்தஸ்து வழங்கல்
ஓமலுார்: தமிழக அரசு பொறியியல் கல்லுாரிகளில் முதல்முறையாக, சேலம் அரசு பொறியியல் கல்லுாரிக்கு, 'ஏ பிளஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி, 1996ல் தொடங்கப்பட்டது. தற்போது, 6 துறைகளில், 2,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அக்கல்லுாரி தர மதிப்பீடு அங்கீகாரம் வழங்க, கடந்த ஆக., 30, 31ல், முதல்கட்டமாக, 'நாக்' குழுவினர் ஆய்வு நடத்தினர். அடுத்து அக்., 24, 25ல், இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அதில் கடந்த, 5 ஆண்டுகளில் மேற்கொண்ட உட்கட்டமைப்பு வசதி, கல்வி திட்டங்கள், மாணவர்களின் சாதனைகள், கல்லுா-ரியில் ஆராய்ச்சி, மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இந்நிலையில் சேலம் அரசு பொறியியில் கல்லுாரிக்கு, 'நாக்' குழு-வினர், 'ஏ பிளஸ்' அந்தஸ்தை நேற்று முன்தினம் வழங்கினர்.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் விஜயன் கூறியதாவது:'நாக்' குழுவினர், 4 புள்ளிக்கு, 3.43 புள்ளிகள் வழங்கி, 'ஏ பிளஸ்' அந்தஸ்து கொடுத்துள்ளனர். இது கல்லுாரியின் குறிப்பிடத்தக்க சாதனை. கல்வியில் உயர் தரத்தை பேணுவதில், அதன் தொடர்ச்-சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில் முதல்முறை, 'ஏ பிளஸ்' தரச்சான்றி-தழை, சேலம் அரசு பொறியியல் கல்லுாரி பெற்றுள்ளது. இச்சாத-னைக்கு பங்காற்றிய உள் தர உறுதி பிரிவு இயக்குனர் சிவலட்-சுமி, அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்-களுக்கு பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.